search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
    X

    சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

    ஆபாச வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    கடலூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் நேதாஜி(வயது21). இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் நண்பர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார்.

    ஆனால் அவரது அழைப்பு தவறுதலாக கடலூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சென்றது. அவரிடம் சிறுமி ஒருவர் பேசினார். இதில் மகிழ்ச்சியடைந்த நேதாஜி அடிக்கடி அந்த சிறுமியுடன் பேசி வந்தார்.

    இதையடுத்து அந்த சிறுமியை பார்ப்பதற்காக நேதாஜி கடலூர் வந்தார். சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அதனை தனது செல்போன் மூலம் வீடியோவில் பதிவு செய்தார். அந்த ஆபாச வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி தொடர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுபற்றி தனது தந்தையிடம் கூறினார். சிறுமியின் தந்தை கடலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் கடலூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேதாஜியை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×