என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்போன் வாங்கி கொடுக்காததால் தீக்குளித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு
Byமாலை மலர்7 Sep 2018 9:05 AM GMT (Updated: 7 Sep 2018 9:05 AM GMT)
கொளத்தூர் அருகே பிறந்த நாள் பரிசாக தந்தை செல்போன் வாங்கிக்கொடுக்காததால் தீக்குளித்த மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
மாதவரம்:
கொளத்தூர் ஜி.கே.எம். காலனி ஜெயபிரகாஷ் தெருவில் வசிப்பவர் பாஸ்கர். இவர் கட்டிட மேஸ்திரி. இவருடைய மகள் மாலதி (18). தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று பிறந்த நாள் இதை வீட்டில் அனைவரும் கேக் வெட்டிக் கொண்டினார்கள்.
அப்போது தனது தந்தை பாஸ்கரிடம் பிறந்த நாள் பரிசாக செல்போன் வாங்கித் தரும்படி கேட்டார். அதற்கு அவர் தற்போது என்னிடம் பணம் இல்லை. பிறகு வாங்கி தருகிறேன் என்று கூறினார்.
இதனால் மனமுடைந்த மாலதி தனி அறைக்கு சென்று மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது தந்தை மகளை காப்பாற்ற முயன்றார். அவருக்கும் கை, கால்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
மாணவி மாலதிக்கு உடலெங்கும் தீ பரவி படுகாயம் அடைந்தார். உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பிறந்த நாளை கொண்டாடிய சிறிது நேரத்தில் மாணவி மாலதி தீக்குளித்து இறந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செல்போன் ஆசை விபரீதத்தில் முடிந்ததால் பெற்றோரும், உறவினரும் சோகத்தில் மூழ்கினார்கள். கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளத்தூர் ஜி.கே.எம். காலனி ஜெயபிரகாஷ் தெருவில் வசிப்பவர் பாஸ்கர். இவர் கட்டிட மேஸ்திரி. இவருடைய மகள் மாலதி (18). தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று பிறந்த நாள் இதை வீட்டில் அனைவரும் கேக் வெட்டிக் கொண்டினார்கள்.
அப்போது தனது தந்தை பாஸ்கரிடம் பிறந்த நாள் பரிசாக செல்போன் வாங்கித் தரும்படி கேட்டார். அதற்கு அவர் தற்போது என்னிடம் பணம் இல்லை. பிறகு வாங்கி தருகிறேன் என்று கூறினார்.
இதனால் மனமுடைந்த மாலதி தனி அறைக்கு சென்று மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது தந்தை மகளை காப்பாற்ற முயன்றார். அவருக்கும் கை, கால்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
மாணவி மாலதிக்கு உடலெங்கும் தீ பரவி படுகாயம் அடைந்தார். உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பிறந்த நாளை கொண்டாடிய சிறிது நேரத்தில் மாணவி மாலதி தீக்குளித்து இறந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செல்போன் ஆசை விபரீதத்தில் முடிந்ததால் பெற்றோரும், உறவினரும் சோகத்தில் மூழ்கினார்கள். கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X