search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னமனூரில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவர் தீக்குளித்து தற்கொலை
    X

    சின்னமனூரில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவர் தீக்குளித்து தற்கொலை

    சின்னமனூர் அருகே மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    சின்னமனூர் அருகில் உள்ள மேலப்பட்டி ராயர்குல தெருவை சேர்ந்த தனுஷ்கோடி மகன் பிரபு (வயது27). இவருக்கும் அவரது உறவினர் பெண்ணான மோனிஷா என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரபு சரிவர வேலைக்கு செல்லாமலும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததாலும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டிற்கு மோனிஷா சென்று விட்டார். சம்பவத்தன்று பிரபு அங்கு சென்று தனது மனைவியை குடும்பம் நடத்தவருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் வர மறுத்துள்ளார். இதனால் வேதனையடைந்த பிரபு தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×