என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சின்னமனூரில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவர் தீக்குளித்து தற்கொலை
தேனி:
சின்னமனூர் அருகில் உள்ள மேலப்பட்டி ராயர்குல தெருவை சேர்ந்த தனுஷ்கோடி மகன் பிரபு (வயது27). இவருக்கும் அவரது உறவினர் பெண்ணான மோனிஷா என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரபு சரிவர வேலைக்கு செல்லாமலும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததாலும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டிற்கு மோனிஷா சென்று விட்டார். சம்பவத்தன்று பிரபு அங்கு சென்று தனது மனைவியை குடும்பம் நடத்தவருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் வர மறுத்துள்ளார். இதனால் வேதனையடைந்த பிரபு தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்