search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காப்பகத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓட்டம்
    X

    காப்பகத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓட்டம்

    சேலத்தில் காப்பகத்தில் இருந்த சிறுவன் மதில் சுவரை ஏறி குதித்து தப்பி ஓடி விட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் சூரமங்கலம், பாரதி தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன். இவரது மனைவி பிரியாதேவி (வயது 29). இவர் சமூக பாதுகாப்பு இயக்கம் வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 3-ந்தேதி ஜங்சன் ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட் பாரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுவனை மீட்டு ரெயில்வே போலீசார் இந்த காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த சிறுவன் தனது பெயர் ரஞ்சித்(14) என்றும் தந்தை பெயர் ராமகிருஷ்ணன் என்றும் 5-ரோடு பகுதியில் வசிப்பதாக விசாரணையில் தெரிவித்தான்.

    அந்த பகுதியில் போலீசார் சென்று விசாரித்தபோது, சிறுவன் கூறியது தவறான தகவல் என தெரியவந்தது. இதனிடையே காப்பகத்தின் பின்பக்க மதில் சுவரை ஏறி குதித்து தப்பி ஓடி விட்டான். தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறுவனை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×