search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு
    X

    ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு

    வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், விபத்தில்லா பயணத்தை மேற்கொள்வது எப்படி என்பது குறித்தும் போலீசாரால் எடுத்து கூறப்பட்டது.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் பாலத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உத்தரவின் பேரில், திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மேனகா, லட்சுமிபிரியா ஆகியோர் முன்னிலையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும், அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் சார்பில், இலவசமாக பிரேக் உள்ளிட்ட வைகளை சரிபார்த்து கொடுத்தனர். மேலும், வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம், விபத்தில்லா பயணத்தை மேற்கொள்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது ஏற்படும் விபத்து குறித்தும், இதனால் குடும்பத்தினர் பாதிக்கப்படுவது குறித்தும் போலீசாரால் எடுத்து கூறப்பட்டது. 
    Next Story
    ×