search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை
    X

    திண்டுக்கல் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

    திண்டுக்கல் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த கோம்பை சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல்லில் இருந்து 10 -வது கிலோ மீட்டரில் உள்ளது அ.வெள்ளோடு, பூக்கள், திராட்சை, கீரை வகைகளுக்கு பெயர் பெற்ற ஊராகும். இன்றைக்கு தண்ணீர் இன்றி விவசாயம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

    இது ஒருபுறம் இருக்க விவசாயம் செழிப்புக்கு காரணமான மூலிகை மலையான சிறுமலை வெள்ளோட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது தான் இதற்கு சிறப்பு. விவசாயத்திற்காக சிறுமலை கோம்பை பகுதியில் தோட்டங்களிலேயே வீடு கட்டி குடியிருப்போரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியதால் பொதுமக்கள் இணைந்து வெள்ளோட்டில் இருந்து கோம்பை பகுதிக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு பாத்திமா சாலை போட்டனர்.

    இதன் பின்னர் ஒருமுறை இந்த சாலை புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுபணி துறையினர், சுற்றுலா பயணிகள், கோம்பை பகுதி வாழ் பொது மக்களின் வாகனங்கள் என அதிகளவு சென்று வந்தது. இவை தவிர தனியார் பஸ் ஒன்று சென்று வந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து கோம்பைக்கு முழு நேர அரசு பஸ் ஒன்றும் இயக்கப்பட்டது.

    போக்குவரத்து அதிகமாகி போன நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார்சாலை சேதமடைய தொடங்கியது. அப்போது இருந்து பொது மக்கள் சாலையை புதுப்பிக்க வேண்டும் என பல முறை மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர். ஆனாலும் புதுப்பிக்கப்படவே இல்லை. இன்றைய நிலையில் இந்த கோம்பை பாத்திமா சாலை தான் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு கந்தலாகி காட்சி தருகிறது.

    இந்த சாலையில் சென்று வரும் 2 பஸ்களும் டப்பா பஸ்களாக மாறி போனது. பஸ்சில் பயணம் செய்பவர்களுக்கும், பஸ்சை ஓட்டும் டிரைவர்களுக்கும் மட்டுமே தெரியும் இந்த சாலையில் சென்று வரும் நிலை. இந்த சாலையில் இரு சக்கர வாகனம் முதல் பஸ், லாரி வரை சென்று வருவது பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.

    இவை தவிர கந்தலாகி போன சாலையில் பஸ் வரும் போது இரண்டு சக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் வருபவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாவதும் தொடர்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கந்தலாகி போய் போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த கோம்பை சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×