search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு வீரப்பம்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு- லாரிகளில் தண்ணீர் விட கோரிக்கை
    X

    ஈரோடு வீரப்பம்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு- லாரிகளில் தண்ணீர் விட கோரிக்கை

    ஈரோடு வீரப்பம்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தற்காலிகமாக லாரிகள் மூலம் மேல்நிலை தொட்டியில் குடிநீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திண்டல்:

    ஈரோடு மாநகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட வீரப்பம் பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    வீரப்பம்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ஆற்றுநீர், ஆழ் குழாய் நீர் மேல்நிலை தொட்டி அமைத்து குழாய் மூலம் குடிநீர் பெற்று வருகின்றனர்.

    இது குறித்து வீரப்பம் பாளையம் பகுதி மக்கள் கூறியதாவது.-

    எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆற்று நீர் நீரேற்று நிலையத்தில் பழுது ஏற்பட்டதால் இப்பகுதிக்கு முறையாக ஆற்று நீர் கிடைக்கவில்லை.

    அதே போல் ஆழ்நிலை குழாய்கள் வறண்டு விட்டதால் முறையாக தண்ணீர் வருவதில்லை. ஒரே ஒரு ஆழ்குழாய் மூலம் தற்போது தண்ணீர் பிடித்து வருகிறோம். அதுவும் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பிடிக்க வேண்டி உள்ளது.

    மேலும் எங்கள் பகுதிக்கு வரும் கீழ்பவானி வாய்க்காலில் வரும் தண்ணீரும் முறையாக பராமரிப்பு இன்றியும், தூர்வார படாததாலும் குறைந்த அளவே வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

    எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு சீராக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரைக்கும் தற்காலிகமாக லாரிகள் மூலம் மேல்நிலை தொட்டியில் குடிநீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    Next Story
    ×