என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடக்கும் இடங்கள்- கலெக்டர் அறிவிப்பு
Byமாலை மலர்6 Sep 2018 11:33 AM GMT (Updated: 6 Sep 2018 11:33 AM GMT)
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு- இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து தீர்வு காணப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வட்டம் கோரம்பள்ளம் பகுதி - 2 , ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு, கோவில்பத்து, திருச்செந்தூர் வட்டம் சேர்ந்த மங்கலம், சாத்தான்குளம் வட்டம் கருங்கடல், கோவில்பட்டி வட்டம் தோணுகால்,
விளாத்திகுளம் வட்டம் சங்கரலிங்கபுரம், எட்டயபுரம் வட்டம் ராஜாப்பட்டி, ஓட்டப்பிடாரம் வட்டம் ஜெகவீரபாண்டியாபுரம், கயத்தார் வட்டம் காமநாயக்கன்பட்டி, ஏரல் வட்டம் கீழ்பிடாகை கஸ்பா கிராமங்களில் நாளை (7-ந் தேதி) வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.
முகாம்களில் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு- இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து தீர்வு காணப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வட்டம் கோரம்பள்ளம் பகுதி - 2 , ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு, கோவில்பத்து, திருச்செந்தூர் வட்டம் சேர்ந்த மங்கலம், சாத்தான்குளம் வட்டம் கருங்கடல், கோவில்பட்டி வட்டம் தோணுகால்,
விளாத்திகுளம் வட்டம் சங்கரலிங்கபுரம், எட்டயபுரம் வட்டம் ராஜாப்பட்டி, ஓட்டப்பிடாரம் வட்டம் ஜெகவீரபாண்டியாபுரம், கயத்தார் வட்டம் காமநாயக்கன்பட்டி, ஏரல் வட்டம் கீழ்பிடாகை கஸ்பா கிராமங்களில் நாளை (7-ந் தேதி) வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.
முகாம்களில் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X