search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோளிங்கரில் அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் நடத்தியவர் கைது
    X

    சோளிங்கரில் அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் நடத்தியவர் கைது

    அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்த சோளிங்கர் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    சோளிங்கரை சேர்ந்தவர் சரவணன் மகன் கார்த்திக் (வயது25). சோளிங்கர் அரக்கோணம் மெயின் ரோட்டில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார். இதில் ஆதரவற்ற 6 சிறுவர்கள், ஒரு சிறுமி பராமரிக்கபட்டு வந்தனர்.

    இந்த காப்பகத்தில் வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது காப்பகம் அனுமதியின்றி செயல்படுவது தெரிய வந்தது. அங்கிருந்த சிறுவர், சிறுமி உள்பட 7 பேரையும்மீட்டனர். அவர்களை வேலூர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக சோளிங்கர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அனுமதியின்றி குழந்தைகள் காப்பம் நடத்திய கார்த்திக்கை கைது செய்தனர். கார்த்திக் மேலும் காப்பகங்கள் நடத்துகிறார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×