search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேடசந்தூரில் தங்கை கண்முன் பள்ளி மாணவன் விபத்தில் பலி
    X

    வேடசந்தூரில் தங்கை கண்முன் பள்ளி மாணவன் விபத்தில் பலி

    வேடசந்தூரில் மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தங்கை கண்முன்னே பள்ளி மாணவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சமத்துவப்புரத்தை சேர்ந்தவர் காஜாமைதீன். பூ வியாபாரம் செய்து வருகிறார். அவரது மகன் முகமது ரபீக் (வயது15). வேடசந்தூரில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். அவரது மகள் மும்தா பேகம் (14). அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    இன்று காலை முகமது ரபீக் தனது தங்கையுடன் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தான். ஒட்டன்சத்திரம்- வேடசந்தூர் சாலையில் சென்ற போது அந்த வழியாக பால் வேன் வந்தது. கண்ணி மைக்கும் நேரத்தில் வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டதில் முகமது ரபீக் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்ததும் தங்கை மும்தா பேகம் கதறி துடித்தார்.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாணவன் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தினை ஏற்படுத்திய வேன் டிரைவர் பிரின்ஸ் பிரபாகரனை கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×