search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொண்டி பகுதியில் பி.எஸ்.என்.எல். இணையதள சேவை துண்டிப்பு - பொதுமக்கள் அவதி
    X

    தொண்டி பகுதியில் பி.எஸ்.என்.எல். இணையதள சேவை துண்டிப்பு - பொதுமக்கள் அவதி

    தொண்டி பகுதியில் பி.எஸ்.என்.எல் இணைய தள தொடர்பு துண்டிப்பால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி பகுதியில் ஏராளமானோர் தொலைபேசி இணைப்பு மூலம் இணையதள வசதி பெற்றுள்ளனர்.

    கடந்த 3 நாட்களாக பிராண்ட்பேண்ட் கம்பி வழி இணையதள வசதி தொழில்நுட்ப காரணங்களால் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வீடுகளில், அலுவலகங்களில் தொலைபேசியுடன் இணையதள வசதி பெற்றவர்கள் மற்றும் பொதுமக்கள், இணையதள இணைப்பு கிடைக்காமல் பெரும் சிரமத்திற்குள்ளாகிறார்கள்.

    தொலைத்தொடர்பில் பல தனியார் நிறுவ னங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிற நிலையில், தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் இந்த காலக்கட்டத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய பி.எஸ்.என்.எல் நிறுவனமே மெத்தனமாக இருக்கிறது என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    உடனடியாக பழுதை சரி செய்து இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    Next Story
    ×