search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாஸ்பேட்டையில் பெண்ணுக்கு கத்திக்குத்து - 2 பேருக்கு வலைவீச்சு
    X

    லாஸ்பேட்டையில் பெண்ணுக்கு கத்திக்குத்து - 2 பேருக்கு வலைவீச்சு

    லாஸ்பேட்டையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சிநகர் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்சந்திரன், கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி கீர்த்தனா (வயது23).

    தமிழ்ச்சந்திரனுக்கும், அவ்வை நகரை சேர்ந்த சதீஷ் மற்றும் மகாத்மா காந்தி நகரை சேர்ந்த விக்கி, கொட்டுபாளையத்தை சேர்ந்த மதன், ஹேமச்சந்திரன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சதீஷ், விக்கி, மதன், ஹேமச்சந்திரன் ஆகியோர் தமிழ்சந்திரன் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. வீட்டில் மனைவி கீர்த்தனா மட்டும் இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கீர்த்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டில் உள்ள கதவுகளை உடைத்தும், கீர்த்தனாவை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் காயம் அடைந்த கீர்த்தனா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் இதுகுறித்து கீர்த்தனா லாஸ்பேட்டை புறநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந் தன் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் விக்கி, சதீசை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×