search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைதிப் பேரணி - அழகிரிக்கு மு.க.முத்து வாழ்த்து
    X

    அமைதிப் பேரணி - அழகிரிக்கு மு.க.முத்து வாழ்த்து

    கருணாநிதி மறைந்து 30-வது நாளான நேற்று மு.க.அழகிரி தலைமையில் சென்னையில் நடைபெற்ற அமைதி பேரணிக்கு மு.க.முத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். #MKMuthu #MKAlagiri
    சென்னை:

    கருணாநிதி மறைந்து 30-வது நாளான நேற்று அழகிரி தலைமையில் சென்னையில் அமைதி பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணிக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து நேற்று மு.க.அழகிரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ‘என் தம்பி, அழகிரியின் பேரணிக்கு என் வாழ்த்துகள்’ மு.க.முத்து’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கடிதம் அழகிரி ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. #MKMuthu #MKAlagiri

    Next Story
    ×