search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செங்கோடு அருகே மினிலாரி மோதி முதியவர் பலி
    X

    திருச்செங்கோடு அருகே மினிலாரி மோதி முதியவர் பலி

    சந்தைப்பேட்டை அருகே முதியவர் மீது மினிலாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு டவுன் கூட்டப்பள்ளி காலனி பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 70). இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் கூட்டப்பள்ளியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்தார். ஈரோடு மெயின்ரோட்டில் சந்தைப்பேட்டை அருகே அவர் வந்த போது, அந்த வழியாக வந்த மினிலாரி மோதி படுகாயமடைந்தார்.

    இதையடுத்து திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வாசுதேவன் நேற்று இறந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
    Next Story
    ×