search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெக்கிலி கிராமத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்- அமைச்சர் திறந்து வைத்தார்
    X

    பெக்கிலி கிராமத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்- அமைச்சர் திறந்து வைத்தார்

    ஓசூர் அருகே பெக்கிலி கிராமத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி திறந்து வைத்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வெங்கடேசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெக்கிலி கிராமத்தில், ரூ.11 லட்சம் மதிப்பில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். 

    இந்நிகழ்ச்சிக்கு, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரபாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    மேலும் இதில், சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத், மாவட்ட பிரதிநிதி சிட்டிஜெகதீசன், ஓசூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் வாசுதேவன், செல்வராஜ், தாஜுத்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×