search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாண்மைத்துறை சார்பில் காய்கறி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
    X

    வேளாண்மைத்துறை சார்பில் காய்கறி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

    ஜெயங்கொண்டத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் வீரிய ரக காய்கறிகள் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மைத்துறையின் சார்பில் வீரிய ரக காய்கறிகள் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி ஜெயங்கொண்டம் தொட்டிகுளம் கிராமத்தில் நடைபெற்றது.

    பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கிரீடு வேளாண்மை அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ராஜாஜோஸ்லின் வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள், வீரிய ரக காய்கறிகள் சாகுபடியில் விதை நேர்த்தி, குழித்தட்டு நாற்றங்கால், சாகுபடி நிலம் தயார் செய்தல், பயிர் இடைவெளி, நீர் நிர்வாகம், உர நிர்வாகம், களைகள் கட்டுப்பாடு, வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல், பூச்சி, நோய் நிர்வாகம், அறுவடை மற்றும் மதிப்பு கூ ட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்தல் மற்றும் விற்பனை குறித்து விளக்கி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

    வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மீனாட்சி அட்மா திட்ட செயல்பாடுகளை விளக்கி கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகன் உழவன் செயலி பதிவிறக்கம் குறித்து விளக்கினார்.

    பயிற்சியில் தொட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×