search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் அபேஸ்
    X

    சேலம் அருகே தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் அபேஸ்

    சேலம் அருகே தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த காட்சிகள் சி.சி.டி.வி. காமிராவில் பதிவானதால் திருட்டு கும்பலை பிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    மேச்சேரி:

    சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 47). இவர் இரும்பாலையில் சீனியர் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார்.

    இவரும் மேச்சேரியில் வெல்டிங் பட்டறை நடத்தி வரும் காத்தமுத்து என்பவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் மற்றும் வீடுகளை கட்டியும் விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் மேச்சேரியை சேர்ந்த குமரேசன் என்பவருக்கு வீட்டை விற்றதில் வாங்கிய பணம் ரூ. 10 லட்சத்தை வயர் கூடையில் வைத்து தனது மோட்டார் சைக்கிளில் தொங்கி விட்டிருந்தார்.

    மேச்சேரி சுப்ரமணி நகரில் நடைபெறும் வீட்டு வேலை பணியை பார்வையிட்டு விட்டு திரும்பி வருவதற்குள் பைக்கில் இருந்த ரூ.10 லட்சம் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மேச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அங்கிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில் 2 மோட்டார் சைக்கிளில் 3 பேர் கொண்ட கும்பல் வந்ததும் அதில் ஒருவர் கூடையில் இருந்த பணத்தை எடுத்து செல்வதும் பதிவாகி இருந்தது.

    அந்த 3 பேரையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினர். அப்போது 3 பேரும் வங்கியில் இருந்து வெங்கடாச்சலம் பணம் எடுத்தது முதல் பின் தொடர்ந்து வந்ததும், அவர்கள் 3 பேரும் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் அடையாளம் தெரிந்துள்ளது.

    இதனால் திருட்டு கும்பலை சேர்ந்த 3 பேரையும் பிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். அவர்கள் பிடிபட்டால் தான் இது போல வேறு ஏதேனும் திருட்டில் ஈடுபட்டனரா? என்பது தெரிய வரும்.
    Next Story
    ×