search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களக்காட்டில் குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமமக்கள்
    X

    களக்காட்டில் குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமமக்கள்

    குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்று கூறி கிராம மக்கள் களக்காடு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் மாவடி நெரிஞ்சிவிளையில் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் மூலம் கடந்த 2014-ம் ஆண்டு கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி இன்னமும் திறக்கப்படவில்லை. செங்களாகுறிச்சி பஞ்சாயத்து சார்பில் வடக்குத்தெரு, சர்ச் தெரு ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு நீர்தேக்க தொட்டிகளும் பழுதடைந்து கிடப்பதே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்று கூறி கிராம மக்கள் களக்காடு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    ஆணையாளர் இல்லாததால் அவரது அறை முன்பு போராட்டம் நடத்தினர். இதனைதொடர்ந்து . களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் லிவிபால்ராஜ் மற்றும் யூனியன் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    Next Story
    ×