என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காட்டில் குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமமக்கள்
Byமாலை மலர்5 Sep 2018 11:40 AM GMT (Updated: 5 Sep 2018 11:40 AM GMT)
குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்று கூறி கிராம மக்கள் களக்காடு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் மாவடி நெரிஞ்சிவிளையில் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் மூலம் கடந்த 2014-ம் ஆண்டு கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி இன்னமும் திறக்கப்படவில்லை. செங்களாகுறிச்சி பஞ்சாயத்து சார்பில் வடக்குத்தெரு, சர்ச் தெரு ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு நீர்தேக்க தொட்டிகளும் பழுதடைந்து கிடப்பதே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்று கூறி கிராம மக்கள் களக்காடு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆணையாளர் இல்லாததால் அவரது அறை முன்பு போராட்டம் நடத்தினர். இதனைதொடர்ந்து . களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் லிவிபால்ராஜ் மற்றும் யூனியன் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews
நெல்லை மாவட்டம் மாவடி நெரிஞ்சிவிளையில் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் மூலம் கடந்த 2014-ம் ஆண்டு கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி இன்னமும் திறக்கப்படவில்லை. செங்களாகுறிச்சி பஞ்சாயத்து சார்பில் வடக்குத்தெரு, சர்ச் தெரு ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு நீர்தேக்க தொட்டிகளும் பழுதடைந்து கிடப்பதே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்று கூறி கிராம மக்கள் களக்காடு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆணையாளர் இல்லாததால் அவரது அறை முன்பு போராட்டம் நடத்தினர். இதனைதொடர்ந்து . களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் லிவிபால்ராஜ் மற்றும் யூனியன் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X