search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுனாமி பேரிடர் ஒத்திகை நடந்தபோது எடுத்த படம்.
    X
    சுனாமி பேரிடர் ஒத்திகை நடந்தபோது எடுத்த படம்.

    சாயல்குடி அருகே சுனாமி பேரிடர் ஒத்திகை: 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சுனாமி ஒத்திகை பயிற்சி சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் ரோஜ்மாநகர் கடற்கரையில் நடைபெற்றது.
    சாயல்குடி:

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சுனாமி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் மாதிரி சுனாமி ஒத்திகை பயிற்சியை நடத்தியது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஒத்திகை பயிற்சி சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் ரோஜ்மாநகர் கடற்கரையில் நடைபெற்றது.

    காலை 8.45 மணிக்கு பயிற்சி தொடங்கியது. இதில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், அரசு அலுவலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஒத்திகை பயிற்சியின் தொடக்கத்தில் ஒலிபெருக்கி மூலம் கடலோர கிராமங்களில் சுனாமி குறித்து எச்சரிக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சுனாமியில் சிக்கியவர்களை எப்படி மீட்க வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். பின்னர் சுனாமியில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து அரசு டாக்டர்கள் விளக்கமளித்தனர்.

    சுனாமி அறிவிப்பு வந்த உடனே பொதுமக்கள் பீதியடையாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒத்திகை பயிற்சிக்கு சப்-கலெக்டர் விஷ்ணு சந்திரன், கீழக்கரை போலீஸ் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினர். இதில் கடலாடி வட்டாட்சியர் முத்து லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, கடலாடி ஆணையர் இளங்கோ, மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார், டாக்டர் சரவணன், துணை வட்டாட்சியர் செந்தில் வேல்முருகன், சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கம், கால் நடை மருத்துவர் லிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
    Next Story
    ×