search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமியார் மரணத்துக்கு வந்த மருமகன் திடீர் உயிரிழப்பு- போலீஸ் விசாரணை
    X

    மாமியார் மரணத்துக்கு வந்த மருமகன் திடீர் உயிரிழப்பு- போலீஸ் விசாரணை

    வந்தவாசி அருகே மாமியார் துக்க நிகழ்ச்சிக்கு வந்த மருமகன் மரணமடைந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வந்தவாசி:

    காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் ( வயது 70). இவரது மாமியார் பாப்பம்மாள் (95). இவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மங்கலமாமண்டூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

    இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெருமாள் தனது குடும்பத்தினருடன் மங்கலமாமண்டூர் கிராமத்திற்கு வந்தார்.

    துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மது அருந்தியதாக தெரிகிறது. போதையில் இருந்த பெருமாள் மங்கலமாமண்டூர் கூட்டு சாலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி முன்பு திடீரென இறந்து கிடந்தார்.

    கீழ்கொடுங்காலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெருமாளின் மகன் குமார் (47) கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    Next Story
    ×