search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரளம் அருகே பள்ளி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
    X

    பேரளம் அருகே பள்ளி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

    பேரளம் அருகே பள்ளி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் பேரளம் அடுத்த கூத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவரது மகன் அரிகரன் (வயது 18).

    இந்த நிலையில் அரிகரனின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் அவர் தாத்தா ரெங்கநாதன் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். அரிகரன் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி கூத்தனூர் ஆதி திராவிடர் அரசு பள்ளி கட்டிடத்தின் மேல் அரிகரன் ஏறி நின்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். உடனே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அரிகரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி பேரளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×