என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவெண்காடு அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
சீர்காழி:
நாகை மாவட்டம் திருவெண்காடு அடுத்த சிறுவாளி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணகி (வயது 40). இவர் நேற்று தனது உறவினரான நந்தினி (20) என்ற இளம்பெண்ணுடன் மொபட்டில் திருவெண்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். வண்டியை நந்தினி ஓட்டி சென்றார்.
அப்போது நாங்கூர் முக்கூட்டு என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக சென்ற நெல் அரவை எந்திரம் ஏற்றிச்சென்ற லாரியை நந்தினி முந்தி சென்றார். அந்த சமயத்தில் எதிரே லோடு ஆட்டோ வந்ததால் திடீரென அவர் பிரேக் பிடித்தார்.இதில் வண்டியின் பின்னால் இருந்த கண்ணகி தூக்கி வீசப்பட்டு லாரியின் பின்சக்கரத்தில் சிக்கினார். இதில் அவரது இடுப்பு, கை, கால் நசுங்கியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை சிசிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணகி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்