search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை-தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களில் சுனாமி ஒத்திகை
    X

    நெல்லை-தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களில் சுனாமி ஒத்திகை

    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களில் சுனாமி மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது.
    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களின் சுனாமி முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து, ஹைதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு தெரிவிக்கின்றது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து கடலோர மாவட்டங்களில் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து, மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி நடத்துகின்றது.

    இந்நிலையில் சுனாமி வரும்பட்சத்தில், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக சுனாமி எச்சரிக்கை முன்அறிவிப்புகள் பெறப்படும். இதையடுத்து அத்தகவல் பரிமாற்றமானது அரசுத்துறைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எவ்வாறு சென்றடைகின்றது என்பது ஒத்திகையின் மூலம் சோதிக்கப்படும். இது குறித்து சுனாமி முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை பயிற்சி நெல்லை மாவட்டம் ராதாபுரம் லெவிஞ்சிபுரம் கிராமம் கூட்டப்புளி, திசையன்விளை குட்டம் கிராமம் கூட்டபனை பகுதிகளில் இன்று நடைபெற்றது.

    சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விஷ்ணு தலைமையில் சுனாமி ஏற்படுவது போன்ற மாதிரி ஒத்திகை பயிற்சியினை பொதுமக்கள் முன்னிலையில் காலை நடைபெற்றது. இதில் சுனாமி ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது, பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டான் பகுதி இனிகோ நகர், சாத்தான்குளம் படுக்கப்பத்து, விளாத்திக்குளம் வேம்பார் ஆகிய 3 கிராமங்களில் சுனாமி ஒத்திகை மாதிரி பயிற்சி நடைபெற்றது. இனிகோ நகரில் சப்-கலெக்டர் பிரசாந்த் தலைமையில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    இதில் சுனாமி ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டியவை குறித்து விளக்கப்பட்டது.
    Next Story
    ×