search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் பெண்ணிடம் நகை பறிப்பு- போலீசார் விசாரணை
    X

    மதுரையில் பெண்ணிடம் நகை பறிப்பு- போலீசார் விசாரணை

    மதுரையில் இன்று காலையில் பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சங்கரசுப்பிரமணியன். இவரது மனைவி ஸ்ரீமதி (வயது 45). இவர் இன்று காலை குப்பை கொட்டுவதற்காக வீட்டில் இருந்து தெருமுனைக்கு நடந்து வந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென்று ஸ்ரீமதியை வழிமறித்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள், ஸ்ரீமதி கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியிலேயே கொள்ளையர்கள் இன்று காலை துணிகரமாக நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சோலையழகுபுரம், சுப்பிரமணியபுரம், எம்.கே.புரம், ஜீவாநகர், ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    Next Story
    ×