search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செவ்வாப்பேட்டை அருகே பசுமாடுகளை வி‌ஷம் வைத்து கொன்ற 2 பேர் கைது
    X

    செவ்வாப்பேட்டை அருகே பசுமாடுகளை வி‌ஷம் வைத்து கொன்ற 2 பேர் கைது

    செவ்வாப்பேட்டை அருகே பசுமாடுகளை வி‌ஷம் வைத்து கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். #arrest

    செவ்வாப்பேட்டை:

    செவ்வாப்பேட்டையை அடுத்த திருவூரை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.

    கடந்த வாரம் பார்த்திபனின் 3 பசு மாடுகள் அரண்வாயலையொட்டியுள்ள ஆற்றுப்பாலம் அருகே இறந்து கிடந்தது. இதுபற்றி அவர் திருவள்ளூர் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார்.

    பசு மாட்டினை பரிசோதனை செய்த போது அவற்றுக்கு உணவில் வி‌ஷம் கலந்து கொடுக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசில் பார்த்திபன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வன் விசாரணை செய்த போது முன்விரேதம் காரணமாக திருவூரை சேர்ந்த வேலு மற்றும் வினோத் என்கிற ஊமத்துரை ஆகியோர் பசுமாடுகளுக்கு வி‌ஷம் வைத்து கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து வேலு, வினோத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×