search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லா இடங்களிலும் போராட்டம் கூடாது - அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
    X

    எல்லா இடங்களிலும் போராட்டம் கூடாது - அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

    ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போராடலாம், ஆனால் எல்லா இடங்களிலும் போராட்டம் நடத்தக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #MinisterJayakumar
    சென்னை:

    சுதந்திர போராட்ட தலைவர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதன்பின்னர் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போராடலாம், கருத்து தெரிவிக்கலாம். போராட வேண்டாம் என சொல்லவில்லை.  ஆனால் எல்லா இடங்களிலும் போராடக் கூடாது. போகிற வருகிற இடங்களில் எல்லாம் போராட்டம் நடத்தக்கூடாது. தமிழிசை சவுந்தரராஜனுக்காக இந்த கருத்தை கூறவில்லை. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்காகவும் தான் கூறுகிறேன்.



    பெட்ரோல்-டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும். தமிழக அரசு வரியைக் குறைக்க வாய்ப்பு இல்லை. திமுகதான் எங்களுக்கு பிரதான எதிரி.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar
    Next Story
    ×