search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து 7 பேர் நீக்கம் - திருநாவுக்கரசர் நடவடிக்கை
    X

    கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து 7 பேர் நீக்கம் - திருநாவுக்கரசர் நடவடிக்கை

    காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்டு 7 பேர் இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அழைப்பாளர்களாக இல்லாதவர்கள் மற்றும் ஏற்கனவே கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட முரளிதரன், சீனிவாசமூர்த்தி ஆகியவர்களோடு சேர்ந்துகொண்டு கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தும், சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் கற்பிக்கின்ற வகையிலும், இன்றைய கூட்டத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்கின்ற வகையிலும் செயல்பட்ட காரணத்தினால் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்டு இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்கள். நீக்கப்பட்டவர்களின் பெயர் வருமாறு:-

    முரளிதரன், சீனிவாசமூர்த்தி, கடல் தமிழ்வாணன், வில்லிவாக்கம் ஜான்சன், ஏ.வி.எம்.ஷெரிப், பொன் மனோகரன், திருவொற்றியூர் பாஸ்கர்.

    இவர்களோடு கட்சிக்காரர்கள் கட்சி சம்பந்தமான நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகள் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Thirunavukkarasar
    Next Story
    ×