என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குத்தாலம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து கிளினர் பலி
Byமாலை மலர்4 Sep 2018 4:01 PM GMT (Updated: 4 Sep 2018 4:01 PM GMT)
குத்தாலம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து நீலகிரியை சேர்ந்த கிளினர் பரிதாபமாக இறந்தார்.
குத்தாலம்:
நீலகிரி மாவட்டம் பந்தளம் அருகே உள்ள நெல்லியானம் கொளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு மகன் சுரேஷ்(வயது 31). இவர் லாரி கிளனர் ஆவார். அதே பகுதி போட்டியாடா சிந்தகை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் மூர்த்தி (28). இவர் லாரி டிரைவர் ஆவார்.
நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வைக்கோல் ஏற்றுவதற்காக லாரியில் நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள பாலையூர் பரமசிவ புரத்துக்கு வந்தனர்.
பரமசிவபுரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே உள்ள குறுகலான சாலையில் சென்றபோது, எதிர்புறத்தில் வைக்கோல் ஏற்றிய லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த லாரியை கடந்து செல்ல முயன்றபோது, அதில் இருந்த வைக்கோல் இடையூறாக இருந்தது.
இதையடுத்து அந்த லாரியில் இருந்த வைக்கோலை கிளினர் சுரேஷ் இரும்பு கம்பியால் ஒதுக்கி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்து தவறி கீழே விழுந்த சுரேஷ், லாரியின் சக்கரங்களில் சிக்கினார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் பந்தளம் அருகே உள்ள நெல்லியானம் கொளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு மகன் சுரேஷ்(வயது 31). இவர் லாரி கிளனர் ஆவார். அதே பகுதி போட்டியாடா சிந்தகை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் மூர்த்தி (28). இவர் லாரி டிரைவர் ஆவார்.
நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வைக்கோல் ஏற்றுவதற்காக லாரியில் நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள பாலையூர் பரமசிவ புரத்துக்கு வந்தனர்.
பரமசிவபுரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே உள்ள குறுகலான சாலையில் சென்றபோது, எதிர்புறத்தில் வைக்கோல் ஏற்றிய லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த லாரியை கடந்து செல்ல முயன்றபோது, அதில் இருந்த வைக்கோல் இடையூறாக இருந்தது.
இதையடுத்து அந்த லாரியில் இருந்த வைக்கோலை கிளினர் சுரேஷ் இரும்பு கம்பியால் ஒதுக்கி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்து தவறி கீழே விழுந்த சுரேஷ், லாரியின் சக்கரங்களில் சிக்கினார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X