என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரணியல் அருகே சமையல் செய்தபோது தீயில் கருகி பெண் பலி
Byமாலை மலர்4 Sep 2018 2:57 PM GMT (Updated: 4 Sep 2018 2:57 PM GMT)
இரணியல் அருகே சமையல் செய்தபோது ஆடை தீப்பிடித்து எரிந்ததில் பெண் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
இரணியல்:
நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் ஆக்னஸ் (வயது 38). இவரது கணவர் மரிய அற்புதம். இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். ஆக்னஸ் சுங்கான் கடையில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பிடித்தது. இதில் தீ மள,மளவென பரவியது. இதனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக ஆக்னஸ் இறந்தார்.
இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுதேசன், சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் ஆக்னஸ் (வயது 38). இவரது கணவர் மரிய அற்புதம். இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். ஆக்னஸ் சுங்கான் கடையில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பிடித்தது. இதில் தீ மள,மளவென பரவியது. இதனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக ஆக்னஸ் இறந்தார்.
இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுதேசன், சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X