search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரணியல் அருகே சமையல் செய்தபோது தீயில் கருகி பெண் பலி
    X

    இரணியல் அருகே சமையல் செய்தபோது தீயில் கருகி பெண் பலி

    இரணியல் அருகே சமையல் செய்தபோது ஆடை தீப்பிடித்து எரிந்ததில் பெண் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
    இரணியல்:

    நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் ஆக்னஸ் (வயது 38). இவரது கணவர் மரிய அற்புதம். இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். ஆக்னஸ் சுங்கான் கடையில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டில் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பிடித்தது. இதில் தீ மள,மளவென பரவியது. இதனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக ஆக்னஸ் இறந்தார்.

    இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுதேசன், சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×