search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
    X

    காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

    கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கோட்டயம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவர் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்தார். தினசரி அவர் கல்லூரிக்கு செல்லும் போது பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொந்தரவு செய்தார்.

    இந்தநிலையில் கல்லூரி மாணவி கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி கல்லூரிக்கு செல்வதற்காக காந்திபுரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து இருந்தார். அப்போது அங்கு வந்த விஜயகுமார் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். மாணவி மறுக்கவே கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.இது குறித்து கல்லூரி மாணவி காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் விஜயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜே.எம். 3 கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வேலுசாமி கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த விஜயகுமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ரேவதி ஆஜராகி வாதாடினார்.

    மாஜிஸ்திரேட் அளித்த தீர்ப்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெண்கள் சுதந்திரமாக வெளியே நடமாட முடியவில்லை. இது போன்ற தண்டனை பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார். #tamilnews
    Next Story
    ×