search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை ஆசிரியர்களுக்கு நாராயணசாமி வாழ்த்து
    X

    புதுவை ஆசிரியர்களுக்கு நாராயணசாமி வாழ்த்து

    நாடு முழுவதும் ஆசிரியர் தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுவை ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #TeachersDay
    புதுச்சேரி:

    நாடுமுழுவதும் ஆசிரியர் தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி புதுவை ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    நற்கல்வி நற்சமுதாயத்தை உருவாக்குகிறது. இதை கருத்தில்கொண்டு புதுவை அரசு ஆண்டுதோறும் 15 சதவீதத்திற்கும் அதிகமாக நிதியை கல்விக்காக செலவு செய்கிறது. ஆசிரியர்கள் வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் உன்னத சேவையை செய்து வருகின்றனர்.

    மாணவர்களின் கல்வித்திறன் மேம்படுத்துவது மட்டுமின்றி அவர்களை நல்வழியில் செம்மைப்படுத்தி மெருகேற்றும் மிக முக்கிய பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளது.

    தலைசிறந்த விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல்கலாம் தன்னை ஒரு ஆசிரியராக நினைவு கூர்வதையே விரும்புவதாக தெரிவித்தது ஆசிரியர் பணியின் மேன்மைக்கு சான்று.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியர் பணியை மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் அனைவரையும் கவுரவித்து நினைவுகூறும் பொருட்டு செப்டம்பர் 5-ம் நாள் முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இந்நன்னாளில் ஆசிரியர் சமுதாயம் எல்லா வளமும் பெற உளமாற வாழ்த்துகிறேன். ஆசிரியர் பணி என்றென்றும் சிறக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TeachersDay
    Next Story
    ×