என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணத்தில் வெளிமாநில மது விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்4 Sep 2018 10:47 AM GMT (Updated: 4 Sep 2018 10:47 AM GMT)
கும்பகோணத்தில் வெளிமாநில மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே பாலக்கரை பெருமாண்டி பகுதியில் அனுமதியின்றி வெளிமாநில மதுபானம் பதுக்கி வைத்து விற்பணை செய்யப்படுவதாக கும்பகோணம் மதுவிலக்கு போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று பாலக்கரை பெருமாண்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு திருட்டுதனமாக மது விற்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கும்பகோணம் வேதவிநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் அருண்குமார் (வயது 27) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த 85 வெளிமாநில மது பாட்டில்களையும், 55 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அவரை போலீசார் கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X