search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியை தன்னுடன் அனுப்பாததால் மாமனாரை தாக்கிய மருமகன் கைது
    X

    மனைவியை தன்னுடன் அனுப்பாததால் மாமனாரை தாக்கிய மருமகன் கைது

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மனைவியை தன்னுடன் அனுப்பாததால் மாமனாரை தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுக்காவிற்குட்பட்ட கொண்டையூனூர் கிராமத்தை சேர்ந்த சிண்ணான்டி மகன் வெள்ளையன் 45. அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கவிதா 25. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த நடராஜ் மகன் சின்னதுரை 27. என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இருவருக்கும் 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இவர்களுக்கும் இடையே 3 மாதத்திற்கு முன் தகராறு ஏற்பட்டு கவிதா தனது தந்தை வீட்டிற்கு வந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில் சின்னதுரை தனது மாமனார் வெள்ளையன் வீட்டிற்கு சென்று தனது மனைவியை அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் மறுத்ததால் சின்னதுரை தனது மாமனார் வெள்ளையனை தாக்கியதில் அவருக்கு நெற்றில் காயம் ஏற்பட்டது.

    ஏற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளையன் கொடுத்த புகாரின் பேரில் ஏற்காடு காவல் துறையினர், சின்னதுரை மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையிலடைத்தனர்.

    Next Story
    ×