search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காசிமேட்டில் மயக்க பொடி தூவி பெண்ணிடம் கொள்ளையடித்த 2 பேர் கைது
    X

    காசிமேட்டில் மயக்க பொடி தூவி பெண்ணிடம் கொள்ளையடித்த 2 பேர் கைது

    காசிமேட்டில் மயக்க பொடி தூவி பெண்ணிடம் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    காசிமேடு பகலவன் நகரை சேர்ந்தவர் வெண்மதி. தினகரனின் ஆதரவாளரான இவர் மகளிர் அணி நிர்வாகியாக உள்ளார். மீன் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக செல்லும் அவர் அங்கு இரவில் தங்குவது வழக்கம்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இதே போன்று மீன்பிடி துறைமுகத்தில் தங்கிய அவர் அயர்ந்து தூங்கிவிட்டார். அப்போது அவரது முகத்தில் மயக்கப் பொடியை தூவி நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இதுபற்றி காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக சிங்காரவேலன் நகரை சேர்ந்த ஜெயசீலன், ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 பவுன் செயின், 4 மோதிரம், வெண்மதியிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.50 ஆயிரத்தில் ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவை மீட்கப்பட்டது.

    Next Story
    ×