என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காசிமேட்டில் மயக்க பொடி தூவி பெண்ணிடம் கொள்ளையடித்த 2 பேர் கைது
Byமாலை மலர்4 Sep 2018 9:07 AM GMT (Updated: 4 Sep 2018 9:07 AM GMT)
காசிமேட்டில் மயக்க பொடி தூவி பெண்ணிடம் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
காசிமேடு பகலவன் நகரை சேர்ந்தவர் வெண்மதி. தினகரனின் ஆதரவாளரான இவர் மகளிர் அணி நிர்வாகியாக உள்ளார். மீன் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக செல்லும் அவர் அங்கு இரவில் தங்குவது வழக்கம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இதே போன்று மீன்பிடி துறைமுகத்தில் தங்கிய அவர் அயர்ந்து தூங்கிவிட்டார். அப்போது அவரது முகத்தில் மயக்கப் பொடியை தூவி நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுபற்றி காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக சிங்காரவேலன் நகரை சேர்ந்த ஜெயசீலன், ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 பவுன் செயின், 4 மோதிரம், வெண்மதியிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.50 ஆயிரத்தில் ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவை மீட்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X