என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மீஞ்சூரில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை பொதுமக்கள் அவதி
பொன்னேரி:
மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன் வாயல் பகுதி 1-வது, 2-வது, 3-வது தெருக்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு கடந்த 6 மாதமாக குடிநீர் சரவர வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
மேலும் எப்போதாவது வரும் குடிநீரிலும் கழிவுநீர் கலந்து கருப்பு மற்றும் மஞ்சள் நிறமாக காணப்படுகிறது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அவர்கள் தவித்து வருகிறார்கள்.
இதையடுத்து டிராக்டர் மூலம் விற்கப்படும் தண்ணீரை மட்டுமே நம்பி உள்ளனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.6 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “குடிநீர் தட்டுப்பாடு குறித்து மீஞ்சூர் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கூடுதல் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதே போல் அப்பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பால் அங்கேயே தேங்கி கிடக்கிறது. இதனால் தெருக்கள் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்வதில்லை என்றும் பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்