search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடசேரி பஸ் நிலையத்தில் அடுத்தடுத்து 2 பேர் பலி- போலீசார் விசாரணை
    X

    வடசேரி பஸ் நிலையத்தில் அடுத்தடுத்து 2 பேர் பலி- போலீசார் விசாரணை

    வடசேரி பஸ் நிலையத்தில் 2 பேர் பிணமாக கிடந்ததால் இது குறித்து பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    வடசேரி பஸ் நிலையத்திற்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று குமரி மாவட்ட கிராம பகுதிகளுக்குச் செல்லும் டவுன் பஸ்கள் நிற்கும் இடம் அருகே சுமார் 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். திடீரென கீழே விழுந்த அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு சிலர் முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார்.

    இதேபோல் பஸ் நிலையம் மேற்கு பகுதியில் மதில் சுவரில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுத்திருந்தார். சுவரில் இருந்து தவறி பஸ் நிலையம் பகுதியில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் பஸ்நிலையத்திற்குள் அடுத்தடுத்து 2 பேர் பிணமாக கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.  இது குறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு பிணமாக கிடந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக இங்கு வந்தனர். என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×