search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடையை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
    X

    டாஸ்மாக் கடையை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

    கிள்ளுக்கோட்டையில் பள்ளிக்கூடம், கோவிலுக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்யகோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கீரனூர்:

    கீரனூர் அருகே உள்ள கிள்ளுக்கோட்டையில் பள்ளிக்கூடம், கோவிலுக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்யகோரி கீரனூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    பின்னர் குளத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் மதுபானகடையை இடம் மாற்றுவதாக உறுதியளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அக்கட்சியின்மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நடராசன் தலைமையில் குன்றாண்டார் கோவில் ஒன்றிய செயலா ளர் சண்முகம், துணை செயலாளர் ஏழுமலை உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    Next Story
    ×