என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கம்பம் அருகே ரேக்ளா பந்தய மாடுகளுக்கு எதிர் நீச்சல் பயிற்சி
Byமாலை மலர்3 Sep 2018 12:26 PM GMT (Updated: 3 Sep 2018 12:26 PM GMT)
கம்பம் அருகே ரேக்ளா பந்தய மாடுகளுக்கு எதிர் நீச்சல் பயிற்சி, நடை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், காமையகவுண்டன் பட்டி, சுருளிப்பட்டி, நாராயண தேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரட்டை மாட்டு வண்டி என்னும் ரேக்ளா பந்தயம் நடைபெறும்.
பல்வேறு வகை ரேக்ளா மாடுகளை இப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு குழந்தைகள் போல வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் வளர்க்கப்படும் ரேக்ளா மாடுகள் தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் பந்தயங்களில் பங்கேற்கும்.
கோவில் திருவிழாக்களிலும் முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் விழாக்களிலும் இது போன்ற ரேக்ளா பந்தயங்கள் நடைபெறும். இந்த பந்தயங்களில் பங்கேற்கும் மாடுகளுக்கு கம்பம் அருகே உள்ள மேற்கு மலையடிவார பகுதியான 18-ம் கால்வாய் செல்லும் ஏகலூத்து சாலை, கம்பம் மெட்டு மலைச்சாலை, புதுக்குளம் சாலை, மணிக்கட்டி ஆலமர சாலை உள்ளிட்ட சாலைகளில் நடைபயிற்சி, ஓட்டம், பாரம் இழுத்துச் செல்லுதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது முல்லைப் பெரியாற்றில் 18-ம் கால்வாயில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் ரேக்ளா மாடுகளுக்கு எதிர்நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாடுகளின் கழுத்து கயிறை பிடித்துக் கொண்டு ½ மணி நேரம் ஆற்று நீரில் எதிர் நீச்சல் அடிக்க மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன மூலம் ரேக்ளா மாடுகள் புத்துணர்வு பெறுவதுடன் பந்தயங்களில் கலந்து கொள்ளும் போது களைப்பு ஏற்படாமல் ஓடும் திறனை பெறுகிறது என அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், காமையகவுண்டன் பட்டி, சுருளிப்பட்டி, நாராயண தேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரட்டை மாட்டு வண்டி என்னும் ரேக்ளா பந்தயம் நடைபெறும்.
பல்வேறு வகை ரேக்ளா மாடுகளை இப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு குழந்தைகள் போல வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் வளர்க்கப்படும் ரேக்ளா மாடுகள் தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் பந்தயங்களில் பங்கேற்கும்.
கோவில் திருவிழாக்களிலும் முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் விழாக்களிலும் இது போன்ற ரேக்ளா பந்தயங்கள் நடைபெறும். இந்த பந்தயங்களில் பங்கேற்கும் மாடுகளுக்கு கம்பம் அருகே உள்ள மேற்கு மலையடிவார பகுதியான 18-ம் கால்வாய் செல்லும் ஏகலூத்து சாலை, கம்பம் மெட்டு மலைச்சாலை, புதுக்குளம் சாலை, மணிக்கட்டி ஆலமர சாலை உள்ளிட்ட சாலைகளில் நடைபயிற்சி, ஓட்டம், பாரம் இழுத்துச் செல்லுதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது முல்லைப் பெரியாற்றில் 18-ம் கால்வாயில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் ரேக்ளா மாடுகளுக்கு எதிர்நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாடுகளின் கழுத்து கயிறை பிடித்துக் கொண்டு ½ மணி நேரம் ஆற்று நீரில் எதிர் நீச்சல் அடிக்க மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன மூலம் ரேக்ளா மாடுகள் புத்துணர்வு பெறுவதுடன் பந்தயங்களில் கலந்து கொள்ளும் போது களைப்பு ஏற்படாமல் ஓடும் திறனை பெறுகிறது என அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X