search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாரமங்கலம் அருகே இளம்பெண் மானப்பங்கம்- வாலிபர் கைது
    X

    தாரமங்கலம் அருகே இளம்பெண் மானப்பங்கம்- வாலிபர் கைது

    தாரமங்கலம் அருகே இளம்பெண்ணை மானப்பங்கம் படுத்தியதாக அளித்த புகாரின் பேரில் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள அழகுசமுத்திரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் ஒரு பெட்டிக்கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது, மளிகை கடைக்கு வந்த அதே ஊரை சேர்ந்த மாதேஸ் என்பவர் பெட்டிக்கடை உரிமையாளரிடம் தகராறு செய்தார்.

    இதை பார்த்த அந்த பெண், கடையில் சண்டை போடாதீர்கள் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த மாதேஷ் ஆபாச வார்த்தைகளை பேசி அந்த பெண்ணை மானப்பங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் மாதேஷ் கைது செய்தார்.
    Next Story
    ×