search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கயத்தாறில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
    X

    கயத்தாறில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    கயத்தாறில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    கயத்தாறு:

    கங்கைகொண்டான் அருகேயுள்ள பருத்தி குளத்தை சேர்ந்தவர் சண்முகராஜ்(வயது31). இவர் ஜே.சி.பி. ஆப்ரேட்டர். நேற்று இவர் கயத்தாறுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    4 வழி சாலையில் தனியார் பள்ளி அருகே வந்தபோது சண்முகராஜ் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளில் இருந்துதவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சண்முகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×