search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்
    X

    மயிலாடுதுறை அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்

    மயிலாடுதுறை அருகே திருமணமான 2 மாதத்தில் புதுபெண் மர்மமாக இறந்த சம்பவம் தலைஞாயிறில் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையை அடுத்த ராதா நல்லூரை சேர்ந்த குழந்தைவேல் என்பவர் மகள் ரம்யா (வயது 33). இவருக்கும், தலைஞாயிறு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த ரம்யா நேற்று மாலை கணவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றிய புகாரின் பேரில் மணல் மேடு (பொறுப்பு ) இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து ரம்யா சாவில் மர்மம் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ரம்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்.

    ரம்யா திருமணமான 2 மாதத்தில் மர்மமான முறையில் இறந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருமணமான 2 மாதத்தில் புதுபெண் மர்மமாக இறந்த சம்பவம் தலைஞாயிறில் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.

    Next Story
    ×