search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடையம் அருகே இளம்பெண் மாயம்
    X

    கடையம் அருகே இளம்பெண் மாயம்

    கடையம் அருகே இளம்பெண் மாயம் ஆனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடையம்:

    கடையம் அருகே உள்ள மந்தியூரை சேர்ந்தவர் சின்ன பழனி. இவரது மனைவி மேரி (வயது23). சின்ன பழனி வெளியூரில் வேலை செய்து வருகிறார். மேரி அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற மேரி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மேரி எங்கு சென்றார்? அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×