search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூளகிரி அருகே லாரி மீது கார் மோதியதில் வாலிபர் பலி- 4 பேருக்கு தீவிர சிகிச்சை
    X

    சூளகிரி அருகே லாரி மீது கார் மோதியதில் வாலிபர் பலி- 4 பேருக்கு தீவிர சிகிச்சை

    சூளகிரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    வேப்பனஹள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காமன்தொட்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் பெங்களூருவில் இருந்து குடியாத்தத்திற்கு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது.

    அந்த காரை பெங்களூரை சேர்ந்த டிரைவர் நைமோன் (வயது37) என்பவர் ஓட்டிவந்தார். அவருடன் அந்த காரில் ஆனந்த் (32), ஆனந்தம்மா (57), பாலு(33), அர்சுணன் (26) ஆகியோர் பயணம் செய்தனர். டிரைவர் காரை ஓட்டிக் கொண்டிருக்கும்போது தூக்கத்தில் கண் அயர்ந்து விட்டார்.

    இதனால் கார் முன்னால் சென்ற சிமெண்ட் பாரம் ஏற்றி சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.

    இதில் காரில் முன் சீட்டில் பயணம் செய்த அர்சுனன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயத்துடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×