என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துறையூரில் ஓவிய ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருட்டு
Byமாலை மலர்2 Sep 2018 6:14 PM GMT (Updated: 2 Sep 2018 6:14 PM GMT)
துறையூரில் ஓவிய ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து, அவருடைய மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 16 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் குட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 52). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது அண்ணனின் பணி ஓய்வு பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் புலிவலத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று காலை பிரபாகரன் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது.
பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள், ரூ.21 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 மடிக்கணினிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாதததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பிரபாகரன் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பூட்டு, பீரோ உள்ளிட்டவைகளில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தில், பிரபாகரன் தனது மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 16 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் குட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 52). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது அண்ணனின் பணி ஓய்வு பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் புலிவலத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று காலை பிரபாகரன் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது.
பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள், ரூ.21 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 மடிக்கணினிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாதததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பிரபாகரன் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பூட்டு, பீரோ உள்ளிட்டவைகளில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தில், பிரபாகரன் தனது மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 16 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X