என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
Byமாலை மலர்2 Sep 2018 8:49 AM GMT (Updated: 2 Sep 2018 8:49 AM GMT)
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #AsianGames2018
ஆலந்தூர்:
இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் பாய்மர படகு போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வருண் தக்கார், கணபதி ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். பெண்கள் பிரிவில் வர்ஷா, சுவேதா ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் 4 பேரும் நேற்று இரவு நாடு திரும்பினார்கள். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை பெற்றோர், நண்பர்கள், தமிழ்நாடு செய்லிங் அசோசியேசன் உறுப்பினர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
அப்போது வருண் தக்கார் பேசுகையில், தான் 8 வருடமாக பயிற்சி எடுப்பதாகவும், இப்போட்டிக்காக தான் பள்ளிப்படிப்பினை பாதியில் கைவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், பள்ளியில் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றார்.
கணபதி கூறுகையில், “இம்முறை வெண்கலம் வென்றதாகவும், அடுத்த முறை தங்கம் வெல்வோம் என நம்பிக்கையுடன் கூறினார். இந்த விளையாட்டுக்கு போதுமான விளம்பரம் இல்லை என வருத்தம் தெரிவித்த அவர் இந்த வெற்றியை முதலில் தனது பெற்றோருக்கு அர்ப்பணிப்பதாக கூறினார்.
தொடர்ந்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வீரர், வீராங்கனைகள் பகிர்ந்து கெண்டனர். #AsianGames2018
இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் பாய்மர படகு போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வருண் தக்கார், கணபதி ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். பெண்கள் பிரிவில் வர்ஷா, சுவேதா ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் 4 பேரும் நேற்று இரவு நாடு திரும்பினார்கள். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை பெற்றோர், நண்பர்கள், தமிழ்நாடு செய்லிங் அசோசியேசன் உறுப்பினர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
அப்போது வருண் தக்கார் பேசுகையில், தான் 8 வருடமாக பயிற்சி எடுப்பதாகவும், இப்போட்டிக்காக தான் பள்ளிப்படிப்பினை பாதியில் கைவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், பள்ளியில் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றார்.
கணபதி கூறுகையில், “இம்முறை வெண்கலம் வென்றதாகவும், அடுத்த முறை தங்கம் வெல்வோம் என நம்பிக்கையுடன் கூறினார். இந்த விளையாட்டுக்கு போதுமான விளம்பரம் இல்லை என வருத்தம் தெரிவித்த அவர் இந்த வெற்றியை முதலில் தனது பெற்றோருக்கு அர்ப்பணிப்பதாக கூறினார்.
தொடர்ந்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வீரர், வீராங்கனைகள் பகிர்ந்து கெண்டனர். #AsianGames2018
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X