search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
    X

    ஊத்துக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

    ஊத்துக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicide

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் சின்னராசு. போட்டோ கிராபர். இவரும் பேரண் டூர் கிராமத்தை சேர்ந்த சரண்யாவும் காதலித்து 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.

    நேற்று சரண்யா குழந்தையை தாய் வீட்டில் விட்டு வந்தார். இது குறித்து கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரண்யா வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு மின் விசிறியில் தூக்குபோட்டுக் கொண்டார்.

    உடனே சின்னராசு, அக்கம் பக்கத்தினர் வீட்டு கதவை உடைத்து சரண்யாவை மீட்பதற்குள் அவர் இறந்துவிட்டார்.

    இது குறித்து சரண்யாவின் தந்தை ஊத்துக்கோட்டை போலீசில் புகார் செய்தார். திருமணம் நடந்து 1½ ஆண்டுகள் ஆகி உள்ளதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×