search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவினாசி அருகே விபத்தில் பெண் பலி - கணவர் படுகாயம்
    X

    அவினாசி அருகே விபத்தில் பெண் பலி - கணவர் படுகாயம்

    அவினாசி அருகே மொபட் மீது மற்றொரு மொபட் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி பெண் பலியானார்.
    அவினாசி:

    அவினாசி எம்.கே.பி. லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது 60). விவசாயி. இவருடைய மனைவி தங்கமணி(55). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சூளைபகுதியில் இருந்து அவினாசி நோக்கி மொபட்டில் வந்து கொண்டிருந்தனர். காமராஜ்நகர் அருகே வந்த போது, பின்னால் வந்த மற்றொரு மொபட் ராமசாமி மொபட்டின் மீது மோதியது.

    இதில் கணவன்-மனைவி இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கமணி பரிதாபமாக உயிரிழந்தார். ராமசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×