என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பருவநிலை மாற்றம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
Byமாலை மலர்1 Sep 2018 4:54 PM GMT (Updated: 1 Sep 2018 4:54 PM GMT)
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கிரீடு வேளாண் அறிவியல் மையமும், நபார்டு வங்கியும் இணைந்து பருவநிலை மாற்றம் குறித்தும், வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கிரீடு வேளாண் அறிவியல் மையமும், நபார்டு வங்கியும் இணைந்து பருவநிலை மாற்றம் குறித்தும், வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் இளஞ்சேரன் தலைமை தாங்கினார்.
வேளாண் அறிவியல் மையத்தின் தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான அழகுகண்ணன் வரவேற்றார். முகாமில் நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் சரண்யா, தனியார் தொண்டு நிறுவன அலுவலர்கள் ஸ்ரீதேவி மற்றும் நெடுஞ்செழியன் ஆகியோர் பேசினர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் ராஜாஜோஸ்லின், வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா மற்றும் கால்நடை அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர் கிருத்திகா ஆகியோர் தங்கள் துறை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர்.
மேலும் இம்முகாமில் நுண்ணீர் பாசனம் பற்றிய செயல்விளக்கத்தை மைய பண்ணை மேலாளர் திருமலைவாசன் செய்து காட்டினார். சொட்டுநீர் பாசன உபகரணங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். முடிவில் மைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுனர் அசோக்குமார் நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கிரீடு வேளாண் அறிவியல் மையமும், நபார்டு வங்கியும் இணைந்து பருவநிலை மாற்றம் குறித்தும், வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் இளஞ்சேரன் தலைமை தாங்கினார்.
வேளாண் அறிவியல் மையத்தின் தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான அழகுகண்ணன் வரவேற்றார். முகாமில் நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் சரண்யா, தனியார் தொண்டு நிறுவன அலுவலர்கள் ஸ்ரீதேவி மற்றும் நெடுஞ்செழியன் ஆகியோர் பேசினர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் ராஜாஜோஸ்லின், வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா மற்றும் கால்நடை அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர் கிருத்திகா ஆகியோர் தங்கள் துறை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர்.
மேலும் இம்முகாமில் நுண்ணீர் பாசனம் பற்றிய செயல்விளக்கத்தை மைய பண்ணை மேலாளர் திருமலைவாசன் செய்து காட்டினார். சொட்டுநீர் பாசன உபகரணங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். முடிவில் மைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுனர் அசோக்குமார் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X