search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குத்தாலம் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
    X

    குத்தாலம் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

    குத்தாலம் ஒன்றியம் நக்கம்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 2017-18ம் ஆண்டுக்கான சமூக தணிக்கைக்குப்பின் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் நக்கம்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 2017-18ம் ஆண்டுக்கான சமூக தணிக்கைக்குப்பின் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராமபிரமுகர் கேசவன் தலைமை தாங்கினார். இதில் வட்டார வள அலுவலர் சமூக தணிக்கையாளர் வெங்கட்ராஜீலு கலந்து கொண்டு 2017-18ம் ஆண்டில் ரூ.12 லட்சம் செலவில் செய்யப்பட்ட 5 பணிகளின் தணிக்கை செய்யப்பட்ட பணி பதிவேடுகள், விவரங்கள் வாசித்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 51 மனுக்கள் பெறப்பட்டன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஊராட்சி செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

    கொழையூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு கிராம பிரமுகர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். வட்டார வள அலுவலர் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு ரூ.13 லட்சம் செலவில் செய்யப்பட்ட 6 பணிகளின் தணிக்கை செய்யப்பட்ட பணி பதிவேடுகளை பார்வைக்கு வைத்தார். கூட்டத்தில் 10 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பணிமேற்பார்வையாளர் பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஊராட்சி செயலாளர் அன்பரசி நன்றி கூறினார்.

    Next Story
    ×