search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே தனியார் பள்ளி வேன் டிரைவர் மீது தாக்குதல்- வாலிபர் கைது
    X

    பண்ருட்டி அருகே தனியார் பள்ளி வேன் டிரைவர் மீது தாக்குதல்- வாலிபர் கைது

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தனியார் பள்ளி வேன் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆ. நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன்(வயது21). இவர் பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.

    நேற்று மாலை சிவராமன் பள்ளி மாணவ- மாணவிகளை வேனில் ஏற்றி கொண்டு ஆ. நத்தம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பண்ருட்டி குடிநீர் தொட்டி அருகே வேன் சென்றபோது அங்கு நின்ற அஜித் குமார்(19), மணிமாறன், மகேஷ் ஆகியோர் வேனில் இருந்த மாணவிகளை பார்த்து விசில் அடித்து கேலி செய்தனர். உடனே சிவராமன் ஏன் மாணவிகளை கிண்டல் செய்கிறீர்கள் என தட்டிக்கேட்டார். அதில் ஆத்திரம் அடைந்த அஜித்குமார், மணிமாறன், மகேஷ் ஆகியோர் சிவராமனை அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    காயம் அடைந்த சிவராமன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். மணிமாறன், மகேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். 
    Next Story
    ×